இந்தியா

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புக்கு ஒரே மாதத்தில் 4 பேர் உயிரிழப்பு

ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை இந்தியா முழுவதும் 12 பேருக்கு கோவிட் – 19 வைரஸ் தொற்று ஏற்பட்டது என்றும், அவர்களில் நான்கு பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர் என்று ஆந்திர பிரதேச மாநில சுகாதார ஆணையர் ஜி. வீரபாண்டியன் தெரிவித்தார்.

இறந்தவர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் பிற நோய்கள் போன்ற கடுமையான இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

“மாநிலத்தில் ஆங்காங்கே கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை, 12 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டது, அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர்,” என வீரபாண்டியன் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

நான்கு மரணங்களில், மூன்று கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர்களும், ஒன்று காக்கிநாடாவை சேர்ந்தவரும் ஆவர் என்று அவர் கூறினார்.

ஆணையரின் கூற்றுப்படி, ஆந்திர பிரதேச மாநிலத்தின் 2026 ஆம் ஆண்டின் முதல் கோவிட்-19 தொற்று கடப்பா மாவட்டத்தில் ஜூன் 26 ஆம் திகதி பதிவானதுடன், ஜூலை 1 முதல் 16 ஆம் திகதிக்குள் மேலும் 11 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

நோய்த்தொற்று உள்ளவர்களுடன் நெருக்கமாக பழகிய பின்னர் இருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக கடப்பா மாவட்டத்தில் எட்டு பேரும், அதைத் தொடர்ந்து குண்டூரில் இரண்டு பேரும், விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடாவில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே இடத்திலிருந்து ஏற்பட்ட ஒரு கொத்தாக அல்லாமல், வெவ்வேறு மண்டலங்களில் இருந்து பதிவாகியுள்ளன,” என்று வீரபாண்டியன் கூறினார்.

மேலும், ஜூன் 26 முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை தென்னிந்திய மாநிலத்தில் 67 கோவிட்- 19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றில் 11 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 12 ஆவது தொற்று தமிழகத்தின் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் வைத்தியக் கல்லூரியில் (சிஎம்சி) கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button