இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் இடையீட்டு தரப்பாக இணைவதற்கு அனுமதி வழங்குமாறு, பஸ்யோதுன்ரட்ட பௌத்த சம்மேளனத்தின் தலைவர் தபனே ஸ்ரீ மகிந்த தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுரேஷ் சலேவை கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், தாம் இடையீட்டு தரப்பாக இணைவது பொதுநலன் கருதியே என்றும், எந்தவொரு சட்டபூர்வ விசாரணையையும் தடுக்கவோ அல்லது பாதிக்கவோ அல்ல என்றும் தேரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்

மாறாக, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்களை மாற்றும் முயற்சிகள், அரசியலமைப்பு மற்றும் சமூக ரீதியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர் | Writ Petition Filed By Major General Suresh Sallay

 

மனுவில் மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) அமைப்பே நடத்தியதாகவும், கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் என உச்ச நீதிமன்றமும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்குதலைத் திட்டமிட்டார் அல்லது அதற்கு உதவினார் என எந்த நீதிமன்ற தீர்ப்பிலும் அல்லது உத்தியோகபூர்வ விசாரணையிலும் குற்றஞ்சாட்டப்படவில்லை.

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரே இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து அவர் அதிகாரிகளை எச்சரித்திருந்ததாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர் | Writ Petition Filed By Major General Suresh Sallay

மேலும், நம்பகமான ஆதாரங்கள் இன்றி சிங்கள பௌத்த இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகளை இலக்காகக் கொண்டு பரந்த சதித்திட்டம் ஒன்று இருப்பதாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் சமூக நல்லிணக்கத்தையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் சுரேஷ் சலேவை தடுத்து வைத்திருப்பதன் சட்டபூர்வத்தன்மையை நீதிமன்றம் ஆராயும் வேளையில், இந்த வழக்குடன் தொடர்புடைய பரந்த அரசியலமைப்பு மற்றும் பொதுநல விடயங்கள் குறித்தும் சங்கத்தின் கருத்தை பரிசீலிக்குமாறு தேரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button