உலகம்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்!

உக்ரைன் , ரஷியா போர் உடன் 1,587 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் டினிப்ரோ, சப்ரோசினியா, சுமி ஆகிய நகரங்கள் மீது ரஷியா கடந்த 29 ஆம் திகதி ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button