உலகம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

வெனிசுலா நாட்டின் கடலோரப் பிராந்தியங்களில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 ஆக அதிகரித்துள்ளதாக புதிய அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பேரழிவைச் சந்தித்த லா குவைரா (La Guaira) மற்றும் தலைநகர் கராகஸ் (Caracas) ஆகிய நகரங்களில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைப் மீட்பதற்காகப் பாதுகாப்புப் படையினரும், சர்வதேசப் மீட்புக் குழுவினரும் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து வரும் நில அதிர்வுகளுக்கு மத்தியிலும், சில இடங்களில் மீட்புப் பணிகள் பெரும் நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளன.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி, மூன்று நாட்களுக்கும் மேலாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணும், ஒரு கைக்குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது உள்நாட்டு அவசரக்கால ஊழியர்களுக்குப் பக்கபலமாக வெளிநாட்டு மீட்புக் குழுக்களும், மனிதாபிமான உதவிகளும் வெனிசுலாவிற்குள் வரத் தொடங்கியுள்ளன.

இது தற்போதைய அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

தற்போதைய நிலநடுக்கப் பேரிடரானது, வெனிசுலாவில் ஏற்கனவே பல வருடங்களாக நீடித்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button