உலகம்

தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

‘எல்-நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை குறையும் என்பதால் தமிழகத்தின் திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 12 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாவட்டங்களில் எள் மற்றும் பயறு வகைகள் போன்ற குறுகிய காலப் பயிர்களைச் சாகுபடி செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக நாடு முழுவதுமுள்ள 226 மாவட்ட வேளாண் அதிகாரிகளுடன் மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ்சிங் சௌகான் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழைக் காலத்திலும் எல்-நினோவின் தாக்கம் இருக்கக்கூடும் என்பதால், நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button