உலகம்

கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!

கனடாவின் கிங்ஸ்டன் (Kingston) நகரில் பிரபல தொழில்நுட்பத் துறைப் புள்ளியாக விளங்கிய மைக்கேல் ஹைமா (41) என்பவருக்கு எதிராக ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வரும் மரதன்  குற்றவியல் வழக்கு விசாரணை காரணமாக, அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு மையங்கள் மற்றும் அவற்றின் வளங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.

41 வயதான மைக்கேல் ஹைமா மீது மனிதக் கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 98 கொடூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இக்குற்றச்சாட்டுகளில் 96-ஐ அவர் மறுத்துள்ளதுடன், தனக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க உள்ளதாகவும் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் மொத்தம் 28 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் மைக்கேல் ஹைமாவினால் வேட்டையாடப்பட்ட போது பதின்ம வயதுப் (Teens) பெண்களாக இருந்துள்ளனர்.

இவர்களது அடையாளங்கள் நீதிமன்ற உத்தரவின்படி ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 12 பெண்களுக்கு கிங்ஸ்டன் பாலியல் வன்கொடுமை மையத்தின் (SAC Kingston) ஊழியர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் அழைத்துச் சென்று துணையாக இருப்பதுடன், தொடர் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

கிங்ஸ்டன் என்பது ஒரு நடுத்தர அளவிலான நகரமாகும்.

அங்குள்ள நீதிமன்ற வசதிகளும், பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையங்களின் வளங்களும் இவ்வளவு பெரிய மற்றும் சிக்கலான வழக்கை நீண்ட நாட்களாகக் கையாள்வதால் தற்போது திணறி வருகின்றன.

எனினும், தங்களது மையத்தின் நெருக்கடியை விடப் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை குறித்தே தான் அதிகம் கவலைப்படுவதாக ட்ரினா மார்ட்டின் தெரிவித்தார்.

தங்களாலேயே இந்தக் கடினமான அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் ஒருவித ஆதரவற்ற மற்றும் பலவீனமான சூழ்நிலையை உணரும் போது, இந்த கொடூர சம்பவங்களில் இருந்து உயிர் பிழைத்த அந்த இளம் பெண்கள் (Survivors) ஒவ்வொரு நாளும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது எவ்வளவு பெரிய மன உளைச்சலையும் வேதனையையும் அனுபவிப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button