ஐரோப்பா சென்ற குடியேற்றவாசிகள் படகு விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி

ஐரோப்பா நோக்கிப் பயணித்த குடியேற்றவாசிகளின் படகு ஒன்று மோல்டா தீவுக்கு அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இத்தாலியக் கரையோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளது. வறுமை, உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக வட ஆபிரிக்க நாடுகளிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான படகுகள் மூலம் ஐரோப்பாவிற்குள் குடியேற முற்படும் போதே இத்தகைய தொடர் சோகங்கள் அரங்கேறி வருகின்றன.
ஆபிரிக்க நாடுகளிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்
இந்த நிலையில் விபத்துக்குள்ளான படகிலிருந்து சுமார் 60 குடியேற்றவாசிகளுடன் பயணித்த , 48 பேர் மீன்பிடிப் படகு ஒன்றின் மூலம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
குடியேற்றவாசிகள் பயணித்த படகு கவிழ்ந்து, பலர் கடலில் தத்தளிப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, மோல்டா அரசாங்கம் இத்தாலியக் கரையோர பாதுகாப்பு படையினரின் அவசர உதவியைக் கோரியிருந்தது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இத்தாலிய ரோந்துப் படகு கடலில் மிதந்த 10 பேரின் சடலங்களை மீட்டுள்ளது. எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விபத்து நடந்த கடல் பகுதியில் பயணித்த ஒரு தனியார் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்கள் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த 48 பேரை அவசரமாக மீட்டு உயிர்பிழைக்க வைத்துள்ளனர். வட ஆபிரிக்கக் கரையோரப் பகுதிகளிலிருந்து இத்தாலி மற்றும் மோல்டா ஆகிய ஐரோப்பிய நாடுகளை நோக்கிய இந்த கடல்வழிப் பயணம் உலகிலேயே மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புலம்பெயர்வோர் அமைப்பின் அண்மைக்காலப் புள்ளிவிபரங்களின்படி , இந்தஆண்டில் இதுவரை மட்டும் இந்த மத்திய மத்தியதரைக் கடல் வழியூடாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற குறைந்தது 827 குடியேற்றவாசிகள் நடுக்கடலில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் இதே கடல் பாதையில் பயணித்த 1,330 க்கும் அதிகமான அகதிகள் மரணமடைந்திருந்ததாக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
![]()