பலதும் பத்தும்

மாமியாரை கரம்பிடித்த மருமகன்!

திருமணத்திற்குப் புறம்பான அல்லது சமூக விதிமுறைகளுக்கு முரணான ஒரு ரகசிய காதல் உறவை குறிப்பது கள்ளக்காதல்.

இன்றைய காலக்கட்டத்தில் கள்ளக்காதலால் தம்பதியினர் பிரிவு, தகராறு, அடித்தடி, கொலை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. ஆண் மற்றும் பெண்ணின் கள்ளக்காதலால் பாதிக்கப்படுவது என்னவோ குழந்தைகள் தான்.

இந்த நிலையில், இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் மாமியாரை மருமகன் திருமணம் செய்து பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி வருகிறது. கான்பூரில் மாமியாருடன் 4 ஆண்டுகளாக ரகசிய காதலில் இருந்த மருமகன், இதற்கு மேலும் மறைக்க முடியாது என முடிவெடுத்து, மனைவியை பிரிந்து மாமியாரை முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், கழுத்தில் தாலியுடன் கையில் திருமண சான்றிதழையும் வைத்து ஜோடியாக வெளியிட்ட வீடியோவை பார்த்து குடும்பத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் தரப்பில் இருந்தோ எந்தவொரு புகாரோ மற்றும் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையோ இதுவரை எடுக்கவில்லை. இதனால் இச்சம்பவம் உண்மைதானா என்று பயனர்களில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button