இலங்கை

தவறாக மொழிப் பெயர்க்கப்பட்டதா சங்கீதனின் பாடல்..!; சிறைக்கு சென்ற சிறீதரன் உடைத்த உண்மைகள்

சொல்லிசை பாடகர் சங்கீதன் சதித் திட்டங்கள் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவரை விடுதலைச் செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சங்கீதனை சிறையில் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி பகுதியை சேர்ந்த சங்கீதன் பிழையானவர் அல்ல, அவருடைய பாடல்கள் சிங்களமொழியில் தவறாக மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.
பல சதித் திட்டங்கள் செய்து தான் குறித்து பாடகரை கைது செய்துள்ளார்கள். இவருக்கான பிணை சாதாரணமாக பெற முடியாது. ஏனெனின் குறித்த இளைஞர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால், இவ்வளவு கடினமாக உள்ளது.

இதனால் ஜனாதிபதியுடன் தொடர்புக் கொண்டு இளைஞரை வெளியில் கொண்டு வர வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button