பலதும் பத்தும்

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிரார்த்ததினம் அனுஷ்டிப்பு!

இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407வது சிரார்த்த தினம் நேற்று சனிக்கிழமை யாழ் நல்லூர் பகுதியில் உள்ள சங்கியன் உருவச் சிலையில் சங்கிலியன் அறக்கட்டளையின் செயலாளர் சிறீந்திரன் தலைமையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மக்கள் விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் சங்கிலிய மன்னனின் திரு உருவச் சிலைக்கு விருந்தினர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சங்கிலிய மன்னனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய கண்காட்சி கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் விருந்தினர்கள் உரை இடம்பெற்றதுடன் .

இதனைத் தொடர்ந்து மன்னனின் மனைவிமார் நீராடிய யமுனா ஏரிக்கு ஊர்வலமாக சென்று நீரோட்டிய மலர் மாலை தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் டிவி அரவிந்தராஜ் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஸ்ரீ சுந்தர ஆஞ்சனே ஆலய பிரதம குரு சுந்தரேஸ்வர குருக்கள், இந்து சமய பேரவை தலைவர் சக்தி கிரீபன், சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button