கவிதைகள்

பெருமனது தருவாயே பெருமாளே!… கவிதை… ஜெயராம்சர்மா

கொடியவினை எனையகல
குடிமுழுது விடிவுபெற
அடிதொழுது பரவிவிட – அருளாயே

மனமுருகி தினமுமுனை
தொழுதழுது பாடிவிட
அருகிலெனை அணையவிடு – பெருமாளே

உலகிடையே நாளுமுனை
ஒருபொழுது மறவாத
பெருமனது தருவாயே – பெருமாளே

மனதிலுறை குறையகல
மனநிறைவு எனையடைய
தினமுமெனை காவாவாயோ – பெருமாளே !

( குற்றுப் போடாமல் பதங்கள்வர அமைந்த திருப்புகழ் )

மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button