கவிதைகள்
பெருமனது தருவாயே பெருமாளே!… கவிதை… ஜெயராம்சர்மா

கொடியவினை எனையகல
குடிமுழுது விடிவுபெற
அடிதொழுது பரவிவிட – அருளாயே
மனமுருகி தினமுமுனை
தொழுதழுது பாடிவிட
அருகிலெனை அணையவிடு – பெருமாளே
உலகிடையே நாளுமுனை
ஒருபொழுது மறவாத
பெருமனது தருவாயே – பெருமாளே
மனதிலுறை குறையகல
மனநிறைவு எனையடைய
தினமுமெனை காவாவாயோ – பெருமாளே !
( குற்றுப் போடாமல் பதங்கள்வர அமைந்த திருப்புகழ் )

மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()