இந்த எண்ணெய்களில் சமைக்காதீங்க! கொழுப்பு வேகமாக உடலில் அதிகரிக்குமாம்

பதிவில் கூறப்படும் சமையல் எண்ணெய்கள் உண்மையில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடாதவையாகும். இதை பயன்படுத்தினால் அதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் எண்ணைகள்
தற்போது மக்கள் தங்கள் உடல்நலத்தில் மிகவும் மோசமாக நடந்துகொள்கிறார்கள்.
இதில் பல விடயங்களை மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்ற மறக்கிறார்கள். அந்த வகையில் நாம் சமைக்கும் உணவில் பயன்படுத்தும் எண்ணையில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

பலர் சமையல் எண்ணெயில் அதிக கவனம் செலுத்துவதில்லை, இதன் விளைவாக எந்தக் காரணமும் இல்லாமல் மக்களின் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது.
அதிக அளவில் டிரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு இருக்கும் எண்ணைகளை நமது சமையலில் பயன்படுத்தும் போது
அவை கெட்ட கொழுப்போடு சேர்ந்து இதய நோய்களின் அபாயத்தை அதிகரித்து, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

எந்த எண்ணெய்யில் சமைக்க கூடாது?
பனை எண்ணெய் பெரும்பாலும் இனிப்பு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அகற்றப்படுவதால், இந்த எண்ணெய் இனிப்பு வகைகள் மட்டுமின்றி துரித உணவுகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பனை எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது, இது கெட்ட கொழுப்பை வேகமாக அதிகரித்து, இதய நோய் ஏற்படும் அபாயத்தை பன்மடங்கு உயர்த்துகிறது.

அடுத்து சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெயில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இவற்றை அதிக அளவில் உட்கொண்டால் அழற்சி ஏற்படலாம்.

அரிசித் தவிடு எண்ணெய் மிகவும் சுத்திகரிக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. இது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஹெக்ஸின் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.
அவற்றில் பெரும்பாலும் சோளம், கனோலா மற்றும் பாமாயில் ஆகியவற்றின் கலவைகள் அடங்கியிருக்கும். அவற்றை உற்பத்தி செய்வதற்காக, அவை அதிக அளவில் சுத்திகரிக்கப்படுகின்றன, இது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடும்.

சோள எண்ணெயில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் அதிகமாக உள்ளன, இவை உடலில் அழற்சியை ஏற்படுத்துகின்றன. மேலும், இதில் மிகக் குறைந்த அளவிலேயே ஒமேகா-3 கொழுப்புகள் உள்ளன, இவை இதயத்திற்கு ஆரோக்கியமானவை அல்ல.
![]()