பலதும் பத்தும்

யாழ்., பொது நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சென்று , நூலகத்தை பார்வையிட்டதுடன் , ஒரு தொகை நூல்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

நூலகத்திற்கு சென்ற சந்தோஸ் ஜா, முன்னதாக தனது பாரியாருடன் நூலகத்தினுள் காணப்படும் டொக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் நூலகத்தை பார்வையிட்ட சந்தோஸ் ஜா, நூலகத்திற்கு ஒரு தொகை நூல்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இயாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர், வி.மதிவதனி மாநகர சபை ஆணையாளர் டி.சி. அரவிந்தராஜ் , இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், மற்றும் பிரதம நூலகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button