’’சுடாதே ராபர்ட்! சுடாதே!’’

வீட்டின் மூலையில் இருந்த கூண்டிற்குள் இருந்து வெளிவந்த அந்த ஒரு மரண ஓலம், ஒட்டுமொத்த நீதிமன்றத்தையே அதிர வைத்தது. ஒரு கொலைகாரனைத் தூக்கு மேடைக்கு அனுப்பிய அந்தக் கிளியின் பின்னணி என்ன?
1920-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஒரு செல்வந்த விதவை, தனது பிரம்மாண்ட மாளிகைக்குள் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்காலத்தில் போதிய கைரேகை மற்றும் தடயவியல் தொழில்நுட்பங்கள் இல்லாததால், கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் திணறினர்.
ஆனால், கொலை நடந்த அறையில் இருந்த ‘ஆப்பிரிக்கன் கிரே’ (African Grey) இனத்தைச் சேர்ந்த செல்லக் கிளி ஒன்று, தொடர்ந்து ஒரு பெயரைச் சொல்லி அலறிக்கொண்டே இருந்தது.
கிளியின் அலறல்: “சுடாதே ராபர்ட்! சுடாதே!” என்று அந்தக் கிளி மீண்டும் மீண்டும் கத்தியது. பொலிஸார் இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை முடுக்கியபோது, அது கொலையுண்ட பெண்ணின் சொந்த மருமகனான ராபர்ட் என்பது தெரியவந்தது.
“ஒரு பறவையின் சாட்சியத்தை நீதிமன்றம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?” என எதிர்தரப்பு சட்டத்தரணி கடுமையான வாதங்களை முன்வைத்தார். ஆனால், நீதிபதியோ அதனை ஒரு அசாதாரண சாட்சியாக ஏற்றுக்கொண்டு, கிளியை நீதிமன்றத்திற்குள் கொண்டுவர உத்தரவிட்டார்.
முழு நீதிமன்றமும் மயான அமைதியில் இருந்தபோது, கூண்டுக்குள் இருந்த கிளி, இறந்த பெண்ணின் அதே குரல் பாணியில் “சுடாதே ராபர்ட்!” என்று கத்தியது. நடுவர் மன்றமே (Jury) இந்த அதிர்ச்சியில் உறைந்துபோனது. இறுதியில் அந்த விசித்திர சாட்சியத்தின் அடிப்படையில் ராபர்ட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1920-களில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு நகர்ப்புறக் கதை (Urban Legend) என்று சிலரால் கூறப்பட்டாலும், இதே போன்ற நிஜச் சம்பவங்கள் அண்மைக்காலத்திலும் உலக அரங்கில் பதிவாகியுள்ளன:
மார்ட்டின் துராம் என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவரது வளர்ப்புக்கிளியான “பட்” (Bud), கொலை செய்யப்படுவதற்கு முன்னதாகக் கணவன் பேசிய கடைசி வார்த்தையான “Don’t shoot!” (சுடாதே) என்பதை அப்படியே திரும்பக் கூறி அலறியது. இது, அவரது சொந்த மனைவியே கொலையாளி என்பதைப் பொலிஸார் நிரூபிக்கப் பெரும் உதவியாக இருந்தது.
இந்தியா, ஆக்ரா (2014): நீலம் சர்மா என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், வீட்டில் இருந்த “ஹீரா” என்ற கிளி, கொலையாளியான அவரது மருமகன் ‘அசு’வின் பெயரைச் சொன்னவுடன் கோபமாகக் கத்திச் சிறகடித்தது. அதனை அடிப்படையாக வைத்துப் பொலிஸார் நடத்திய விசாரணையில் கொலையாளி சிக்கினான். கடந்த 2023ஆம் ஆண்டு அவனுக்கு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![]()