இலங்கை

பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு நேரம் நீடிப்பு!

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர்.

பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது.

குறித்த பகுதியை கடந்த ஆண்டு நேரக்கட்டுப்பாட்டுடன் இராணுவத்தினர் போக்குவரத்திற்கு அனுமதித்தனர்.

இந்நிலையில் வடமாகாண ஆளூநர் செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலின் போது, குறித்த வீதியினை 24 மணி நேர போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கோரிக்கையை முன்வைத்தார்.

அதற்கு இராணுவத்தினர், மறுத்துள்ளனர். அழுத்தமான கோரிக்கைகளை தொடர்ந்து மேலும் ஒரு மணி நேரம் வீதியை திறந்து விட சம்மதித்துள்ளனர்

அதன் அடிப்படையில் இதுவரை காலமும் காலை 06 மணி முதல் இரவு 7 மணி வரையில் திறந்து விடப்பட்ட வீதியினை ஒரு மணி நேரம் நீடித்து இரவு 8 மணி வரையில் போக்குவரத்து செய்ய இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் வெசாக் தினமான நேற்றைய தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், தற்போது பலாலி வீதி ஊடாக காலை 06 மணி முதல் இரவு 09 மணி வரையில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button