இந்தியா

ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் – அமைச்சரவையிலும் பாரிய மாற்றம்!

ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

மூன்றாவது ஆட்சி காலத்தில் எதிர்வரும் ஒன்பதாம் திகதியுடன் தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்கிறது.

இந்நிலையிலேயே, ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து தாயகம் திரும்பிய நிலையில், அனைத்து அமைச்சர்களும் அடங்கிய அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருந்தார்.

சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக ஆட்சியின் 12 ஆண்டுகால பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அதில் உள்ள நிறை, குறைகள் விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது அமைச்சரவை மாற்றம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்னும் மூன்று வாரங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சில புதுமுகங்களுக்கு அமைச்சரவை பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை மாற்றத்தில் 12 அமைச்சர்கள் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

இதில் தற்போதைய அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் சிலர் கட்சிப்பணிக்கு செல்ல நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button