உலகம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறுதிச்சடங்கு

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு, பிரமாண்டமான முறையில் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை ஈரான் அரசு மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த வான்வழித் தாக்குதல்களின் முதல் அலையிலேயே அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மூண்ட போர் காரணமாக, ஏப்ரல் மாதம் ஒரு சிறிய அஞ்சலி நிகழ்ச்சி மட்டுமே நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட இந்த உத்தியோகபூர்வ அரசு இறுதிச் சடங்கிற்காகத் தற்போது “சிறப்பு தலைமையகம்” ஒன்று அமைக்கப்பட்டுப் பல்வேறு பாதுகாப்பு முகமைகள் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கான தெஹ்ரான் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மொஹ்சென் மஹ்மூதியை மேற்கோள் காட்டி இந்த இறுதிச் சடங்கு விபரங்கள் வெளியாகியுள்ள போதிலும், இறுதி நிகழ்வு நடக்கும் துல்லியமான நேரம் இன்னும் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button