இலங்கை

பசிலுக்கு இறுகும் பிடி; மற்றுமொரு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு  (29) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தி, ஊவா மாகாண சபை தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை மேற்கொண்டமை தொடர்பிலேயே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி பசிலுடன் சேர்த்து சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் பாஷ்வர குணரத்ன, முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கோட்டை நீதவான் பசந்த அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் இவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்படுவதாக  (29) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசேட மனு ஒன்றின் ஊடாக கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் அறிவித்ததைத் தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button