பலதும் பத்தும்

உண்ணும் உணவு மூலமும் வாய் துர்நாற்றம் உண்டாகலாம்!

தினமும் உண்ணும் உணவுகளில் இருந்தும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலானோர் அதை உணர்வதே இல்லை. கவனத்தில் கொள்வதுமில்லை. பூண்டு. வெங்காயம், காபி, புகையிலை பொருட்கள் மற்றும் பால் பொருட்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது.

ஏனெனில் அவை கடுமையான வாய் துர்நாற்றத்தையும், நாவறட்சியையும் ஏற்படுத்தக்கூடும். வாய் துர்நாற்றத்துக்கு இடம் கொடுக்காமல் சுவாசத்தை இயற்கையாக புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில விஷயங்களை பின்பற்றுவது அவசியமானது.

வாயை ஈரப்பதமாக்க, காலையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

உணவில் புதினா, ஏலக்காய், இஞ்சியை சேர்த்து கொள்ளுங்கள்.

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை உண்ணுங்கள்.

தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள். அப்போது நாக்கை சுத்தப்படுத்தவும் மறக்காதீர்கள்.

பற்களுக்குள் உணவுத்துகள்கள் தங்குவதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

அதிக தண்ணீர் குடிப்பது கூட சுவாசத்தை உடனடியாக மேம்படுத்தும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button