உலகம்

தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!

தெற்கு ஈரானில் ஏவுகணைகள் மற்றும் கண்ணி வெடிகளை நிலைநிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் படகுகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானியப் படைகளினால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைகளின் (CENTCOM) பிரதானி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போது நிலவும் போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா மிகவும் நிதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் அமைதி ஒப்பந்தத்தில் இது என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button