3,000 ஆண்டுகள் பழமையான மர்மத்தை உடைத்த AI

ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான பழமையான களிமண் பலகைகள் பல ஆண்டுகளாக அருங்காட்சியகங்களில், ஆராய்ச்சி மையங்களில் சேமிக்கப்பட்டிருந்தன.
அவற்றில் பல உடைந்து, சில எழுத்துக்கள் மங்கியதால், நிபுணர்களுக்குக் கூட வாசிப்பது கடினமாக இருந்தது.
இப்போது “Palaeographicum” எனப்படும் புதிய AI கருவி, இந்த சிக்கலை தீர்க்க உதவுகிறது.
University of Würzburg மற்றும் Mainz Academy of Sciences ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இந்த AI, cuneiform எழுத்துக்களில் உள்ள சிறிய கைஎழுத்து வேறுபாடுகளை கண்டறிகிறது.
முன்பு பல நாட்கள் எடுத்த வேலை, இப்போது சில நிமிடங்களில் முடிகிறது.
குனிஃபார்ம் எழுத்து (cuneiform signs) 3,500 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்டைட் நாகரிகத்தில் சட்டங்கள், வணிக ஒப்பந்தங்கள், அரசியல் கடிதங்கள் போன்றவற்றை பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்டது.
பலகைகள் உடைந்து, உலகின் பல அருங்காட்சியகங்களில் சிதறியுள்ளதால், அவற்றை மீண்டும் இணைப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது.
AI கருவி, 70,000 புகைப்படங்களில் உள்ள 50 லட்சம் சின்னங்களை ஆய்வு செய்து, ஒரே எழுத்தாளரின் கையெழுத்து பாணியை அடையாளம் காண்கிறது. இதனால், எந்த பலகைகள் ஒரே இடத்தில் எழுதப்பட்டவை என்பதை கண்டறிய முடிகிறது.
மேலும், இந்த AI கருவி, திகதி இல்லாத பலகைகளின் காலத்தை, எழுத்து பாணி அடிப்படையில் கணிக்க உதவுகிறது. இதனால், வரலாற்று ஆய்வாளர்கள் புதிய தகவல்களை விரைவாகக் கண்டறிய முடியும்.
இதில், மனித நிபுணத்துவம் இன்னும் அவசியம் தான், ஆனால் AI கருவி வேகத்தையும் துல்லியத்தையும் அதிகரிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மறைந்திருந்த கதைகள் வெளிச்சத்திற்கு வரும் வாய்ப்பு உள்ளது.
![]()