உலகம்

எதிர்ப்பை குற்றமாக்க வேண்டாம் – லெபனான் அரசுக்கு ஹிஸ்புல்லா தலைவர் அழைப்பு

ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் Naim Qassem, “எதிர்ப்பை குற்றமாக்கும் வகையில் லெபனான் அரசு எடுத்துள்ள முடிவுகளை திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய ஒன்பது பேருக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள் “எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தடைகள் குறித்து உறுதியான நிலைப்பாடு எடுக்காததற்காக பெய்ரூட் அரசையும் அவர் விமர்சித்தார்.

அதேவேளை, லெபனானை ஆக்கிரமிப்பதே இஸ்ரேல் நாட்டின் இறுதி நோக்கமாக உள்ளது என்றும் நயீம் காசிம் குற்றம் சுமத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button