கிழக்கில் ஆயுத பயிற்சி: நடக்கப்போகும் பாரிய அசம்பாவிதங்கள்!

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கடும்போக்காளர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கப்படுவதாகவும் இவை எதிர்காலத்தில் பாரிய அசம்பாவிதங்களுக்கு மூல காரணமாக அமையலாம் என ஐஓடிபிபி பொலிஸ் இணையத்தளம் புலனாய்வு தகவல்களை சுட்டிக்காட்டி தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
லண்டனில் இருந்து இயங்கும் இந்த இணையத்தளம் இது தொடர்பில் தெரிவித்திருக்கும் விரிவான கருத்து: கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் வருண ஜசுந்தரவின் பணிப்புரையின் கீழ் இந்த ஆயுதப்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் வதியும் மொஹமட் உவைஸ் என்பவரே குறித்த ஆயுதப் பயிற்சியை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆயுத பயிற்சி
இந்த மொஹமட் உவைஸ் ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சந்தேக நபராக கைது செய்யப்பட்டு நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுகிறார்.இவரின் வீட்டுக்கு கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நித்தம் சென்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொஹமட் உவைஸ் வீட்டின் வலது பக்கம் இருக்கும் அறையில் இருக்கும் கட்டிலில் போடப்பட்டிருக்கும் விரிப்பு கூட விசேட அதிரடிப்படையின் தயாரிப்பாகும்.
அவ்வளவு நெருக்கத்தில் வருண ஜயசுந்தர பழகுவதாக குறிப்பிடப்படுகிது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதியே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொலிஸ் அதிரடிப்படையிடம் அறிவித்த போது சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாரிய சம்பவம் ஒன்று நடப்பதற்கு முன்னர் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.வருண ஜயசுந்தர ராஜபக்சக்களின் நெருங்கிய சாகாக்களில் ஒருவர்.
ராஜபக்ச ஆட்சி காலத்தில் இவர் விசேட அதிரடிப்படையின் பிரதானியாக செயற்பட்டவர்.அவரின் பணிப்புரையின் பேரிலும் கட்டுப்பாட்டிலேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அக்கராயன் நெலுங்குளம் காட்டிலேயே பயிற்சிகள் நடைபெற்றுள்ளன.அதிகாரம் அற்றுப் போய் வெறிப்பிடித்து இருக்கும் ராஜபக்சக்களின் சகாக்கள் அவர்களுக்காக எதோ ஒரு பாரிய சம்பவத்தை நடத்த கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
![]()