இலங்கை

இலங்கை வருகிறாரா அசாத் மௌலானா!; சிஐடியில் திடீர் திருப்பம் – சாரா ஜெஸ்மின் தொடர்பில் அம்பலமான உண்மைகள்

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்றையதினம் (20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய விடயங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கபட்டுள்ள சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான் தொடர்பில் அவர் பல விடயங்களை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

பிரான்சில் உள்ள அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்துள்ளதாகவும், இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும் குறிப்பிட்டு கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இந்தநிலையில் அசாத் மௌலானா நேரடி சாட்சி கூறுவதாக இருந்தால் அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் அவர் வந்து சாட்சி கூறுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அசாத் மௌலானா நேரடி சாட்சியம் பெற அழைத்து வரவேணடமேன்றால் அரசாங்கம் அதற்கும் தயாராக உள்ளதாகவும், அதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சாரா ஜெஸ்மின் தொடர்பிலும் முரண்நிலை கருத்துக்கள் வெளிவருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button