சுரேஷ் சலேவை இயக்கியவர் விரைவில் கைது! அசாத் மௌலானா வாக்குமூலத்தால் அதிர்ச்சியில் கோட்டாபய

இலங்கையை உலுக்கிய உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்றையதினம்(20) மிக முக்கியமான தகவல்களை மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றில், முன்வைத்துள்ளார்.
பிரான்சில் உள்ள அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டு இந்த தகவல்களை ஒப்படைத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் சுரேஷ் சலேவே பிரதான நபராக உள்ளார் என்று குறிப்பிட்ட அவர்,ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டமை, கீத் நொயார் மீதான தாக்குதல், லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பல விடயங்களை ஜெனரல் திலீப் பீரிஸ் முன்வைத்துள்ளார்.
அசாத் மௌலானா channel 4 இல் குறிப்பிட்டதை விட மேலும் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
![]()