பலதும் பத்தும்

கணவரின் கண்முன்னே யானை மிதித்து பலியான சென்னை பெண்!

இந்தியாவின் கர்நாடக மாநிலம் குடகு அருகே உள்ள துபாரே என்கிற யானைகள் முகாமில் யானைகள் குளியலை சுற்றுலா பயணிகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் இரண்டு யானைகள் திடீரென சண்டை போட்டுக்கொண்டன.

அங்கு, யானைகளின் சண்டையை தனது கணவன், குழந்தையுடன் சென்னை பெண் ஒருவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது, பெண் மீது யானை திடீரென விழுந்ததில் அவர் யானையின் அடியில் சிக்கிக்கொண்டார். குழந்தையை வைத்திருந்த அவரது கணவர் மற்றும் அங்கிருந்தவர்கள் பெண்ணை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அந்த பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த 33 வயதான ஜினு என்ற பெண் கணவன் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button