உயிருக்கு ஆபத்தான நிலையில்…போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை

எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் பதிலடி கொடுக்க தனது ராணுவம் தயாராக இருப்பதாக கூறிய ஈரானின் சமீபத்திய மாற்று முன்மொழிவை நிராகரித்த பின்னர், மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் “உயிருக்கு ஆபத்தான நிலையில்” இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்தார்.
அமெரிக்காவின் ஒரு முன்மொழிவுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் எடுத்த நிலைப்பாட்டிற்கு அதிபர் தெரிவித்த கோபமான எதிர்வினை, எண்ணெய் விலைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியதுடன், ஹார்முஸ் ஜலசந்தியை வர்த்தக கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறப்பது குறித்து விரைவாக ஒரு உடன்பாடு எட்டப்படும் என்ற நம்பிக்கையை தகர்த்தது.
ஈரானின் பதிலை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாத என்று கடுமையாக சாடிய டிரம்ப், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முழுமையான வெற்றியை காணும் என்று ட்ரம்ப் வலியுறுத்தினார்.
மேலும், ஒரு மாதத்திற்கும் மேலாக வளைகுடா பகுதியில் சண்டையை பெருமளவில் நிறுத்தி வைத்திருந்த போர் நிறுத்தம் அதன் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
“மருத்துவர் உள்ளே வந்து, ‘ஐயா, உங்கள் அன்புக்குரியவர் உயிர் பிழைப்பதற்குச் சுமார் ஒரு சதவிகித வாய்ப்பு மட்டுமே உள்ளது’ என்று கூறும் அளவிற்கு, இந்த போர் நிறுத்தம் ஆபத்தான நிலையில் உள்ளது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
வாஷிங்டன் உடனான முந்தைய பேச்சுவார்த்தைகளில் தலைமை பேச்சுவார்த்தையாளராக பணியாற்றிய ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், சிறிது நேரத்திற்கு பிறகு தனது நாடு “எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது” என்று கூறினார்.
![]()