இந்தியா

பதவியேற்ற கையோடு ராஜினாமா செய்தார் விஜய்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், தனது திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று (10) ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், சட்ட விதிகளின்படி ஒரு தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு மற்றொன்றை விடுவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், இன்று காலை தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். இதன்படி, அவர் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் பதவியைத் துறந்துள்ளார்.

முதலமைச்சரின் இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, திருச்சி கிழக்குத் தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்படும். இதனையடுத்து, அடுத்த ஆறு மாத காலத்திற்குள் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button