இந்தியா
தமிழ்நாட்டில் 3ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் த.வெ.க முன்னிலை

இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்த நிலையில் 104 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சிகள் 78 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியானது 51 தொகுதிகளிலேயே முன்னிலை பெற்று பின்தங்கியுள்ளதுடன், புதிய நீதிக் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
![]()