உலகம்
மும்பை குடும்ப மரணங்களுக்கு தர்பூசணி காரணமல்ல: வெளியான திடுக்கிடும் உண்மை

மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட பின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த உயிரிழப்புகள் தர்பூசணி சாப்பிட்டதால் ஏற்படவில்லை என மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடலில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வில், ‘மார்பின்’ (Morphine) எனும் வலி நிவாரணி மருந்து அதிகளவில் கலந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
![]()