இலங்கை

அநுரவின் ஆட்டம் ஆரம்பம் !! மே மாதத்தின் பின் சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள்

இலங்கை அரசியலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

2026 ஆம் ஆண்டு ஊழல்வாதிகள் மற்றும் மோசடிக்காரர்களைச் சிறைக்கு அனுப்பும் ஆண்டாக அமையும் என ஜனாதிபதி மே தினக் கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான கோப்புகளை அநுர அரசு மீண்டும் தூசி தட்டியுள்ளது.

குறிப்பாக, மே மாதத்தின் பின் முக்கிய புள்ளிகள் பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவுள்ளனர் என அநுர அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button