ஏப்ரல் 26 சாய்ந்தமருதுவில் நடந்த சம்பவம்!; 7 வருடங்களின் பின் சொன்ன OIC

சாய்ந்தமருது தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் சஹ்ரான் ஹாசிமின் தோகையினரால் முன்னெடுக்கப்பட்ட அந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள பல மர்ம முடிச்சுகளை அப்போதைய பொறுப்பதிகாரி (OIC) தற்போது பகிரங்கப்படுத்தியுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று குறித்த வீட்டை சுற்றிவளைத்த போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகங்கள் மற்றும் பயங்கரவாதிகள் தங்களை தாங்களே வெடிக்க வைத்துக்கொண்ட கோரக் காட்சிகள் குறித்து அவர் உருக்கமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, உயிரிழப்புக்களைத் தவிர்க்க அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட சவாலான முடிவுகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து அவர் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
![]()