பலதும் பத்தும்

கிளிநொச்சியில் 55,000 ரூபாவுக்கு குழந்தையை விற்ற தாய் கைது!

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை ஐம்பதாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்த தாய் மற்றும் தந்தை எனக் கூறப்படும் ஆண் ஒருவரும் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு தருமபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அதில் ஒரு குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் விற்பனை செய்வதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

தற்பொழுது விற்பனை செய்யப்பட்ட குழந்தை இவர்களுடையதா அல்லது வேறு யாருடைய குழந்தையா என மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தையை விற்பனை செய்த தாய் மற்றும் விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த ஆண் ஒருவரும் மற்றும் குழந்தையை பணம் கொடுத்து பெற்றவர் உட்பட மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை தற்பொழுது பொலிசாரின் பராமரிப்பில் இருந்து வருகின்றது

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *