உலகம்

அமெரிக்காவின் பிடியில் சிக்கிய ‘ஈரான்’ தொடர்பு கப்பல்!

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ஈரானுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்காவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ‘மெரீன் ட்ராஃபிக்’ (Marine Traffic) தரவுகளின்படி, இது சுமார் 3 இலட்சம் தொன் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் கப்பலாகும். இந்தக் கப்பலுக்கு ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்தினால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் இந்திய கப்பல் நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடையது என்ற தகவலும் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

குறித்த கப்பல் ஏப்ரல் 10 ஆம் திகதி வளைகுடா பிராந்தியத்திலிருந்து புறப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கையின் காலி துறைமுகத்திற்கு அருகாமையில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் சர்வதேச ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *