உலகம்

ஏப்ரல் 22-க்குள் ஒப்பந்தம் இல்லையெனில் குண்டுமழை – ஈரானுக்கு டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி, அடுத்த வாரம் ஒரு மிகப்பெரிய போராக வெடிக்கக்கூடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுடன் தற்போது அமலில் உள்ள 2 வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், டிரம்பின் இந்த அதிரடிப் பேச்சு உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள போர்நிறுத்தம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளது.

அதனை நீடிக்காவிட்டால் மீண்டும் போர்ச் சூழல் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ள ட்ரம்ப், எனினும் வெற்றிகரமான ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியும் என தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *