உலகம்

ஆங் சான் சூகியின் தண்டனை குறைப்பு

மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு(80) (படம்) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது.

மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது.

மியான்மா் புத்தாண்டை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆங் சான் சூகியின் நெருங்கிய கூட்டாளியான அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி வின் மியின்ட் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 2021-இல் ஆங் சான் சூகி தலைமையிலான மக்களாட்சியை கவிழ்த்துவிட்டு, மின் ஆங் லயிங் தலைமையிலான இராணுவத்தினா் ஆட்சியைக் கைப்பற்றினா். அப்போது ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மியின்ட் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் சிறைபிடிக்கப்பட்டனா்.

ஊழல், தோ்தல் முறைகேடு எனப் பல குற்றச்சாட்டுகளின்கீழ் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டிருந்த 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் தற்போது 4.5 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் நடைபெற்ற சா்ச்சைக்குரிய தோ்தலைத் தொடா்ந்து, மின்ஆங் லயிங் இம்மாதத் தொடக்கத்தில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றாா். இந்நிலையில், தற்போது 179 வெளிநாட்டினா் உள்பட 4,335 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *