உலகம்

அமெரிக்காவை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்; ட்ரம்பின் முக்கிய தகவல்

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறுகின்றது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Truth Social தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

உலகின் மிகப்பெரிய எண்ணெய் கப்பல்கள் உள்பட மிகப்பெரிய எண்ணிக்கையில் முழுமையாக காலியாக உள்ள கப்பல்கள் அதிக அளவில் தற்போதே அமெரிக்காவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

உலகின் மிகச் சிறந்த மற்றும் இனிமையான எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக் கொள்வதற்காகவே வந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டு மிகப்பெரிய எண்ணெய் பொருளாதாரங்களை கொண்ட நாடுகளிடம் கிடைப்பதை விட, எங்களிடம் அதிக அளவு எண்ணெய் உள்ளது. அதுவும் மிக உயர்ந்த தரத்தில். இவ்வாறு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *