இலங்கை

விடுதலை புலிகளுடன் இணங்கி இருந்தால் மகிந்தவிற்கு நோபல் பரிசு; நாமல் வெளியிட்ட தகவல்

இலங்கையில் போர் இடம் பெற்றபோது தமிழீழ விடுதலை புலிகளுடன் இணங்கி செயற்பட்டிருந்தால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நோபல் சமாதான விருது கிடைத்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமூக பாதிப்புகளின் போது மக்களின் சார்பில் செயல் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் நான்கு தடவைகள் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலையை விடவும் கோவிட் காலம் மிகவும் சிக்கல் மிக்க காலம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது நீங்கள் அந்தப் பக்கத்தை பார்த்துக் கொள்ளுங்கள் நாங்கள் இந்த பக்கத்தை பார்த்துக் கொள்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த தீர்மானித்திருந்தால் இன்று அவருக்கு நோபல் சமாதான விருது கிடைத்திருக்கும் என நாமல் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு போரை வென்றதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்த காரணத்தினால் கொலைகாராகவும், திருடராகவும் மஹிந்த சித்தரிக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் காலத்தில் மக்கள் பாதிக்கப்படுவதனை தவிர்ப்பது தமது இலக்காக காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளில் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாது மக்களை பாதுகாப்பதற்காக தமது அரசாங்கம் சிரத்தையுடன் செயல்பட்டது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது பங்களாதேஷ் மற்றும் நேபாளில் போன்று போராட்டக்காரர்களை கொலை செய்யாது, நாங்கள் ஒரு அடி பின்வாங்கி சமூகத்தில் ஏற்படவிருந்த பாரிய பாதிப்பினை தவிர்த்தோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் ஜனநாயக ரீதிகளும் மத கொள்கைகளின் அடிப்படையில் ஆட்சி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எப்பொழுதும் மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் எனவும் மக்கள் விரும்பினால் ஆட்சியில் இருக்கவும் அவர்கள் விரும்பாவிட்டால் வெளியே செல்லவும் நேரிடும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் நெஞ்சில் ஈரம் என்று செயல்படுவதாகவும் தம்மால் ஏற்பட்ட இழப்புக்களை மக்கள் மீது திணிப்பதாகவும் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *