உலகம்

ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை; ஈரான் கடும் பதிலடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள போர் எச்சரிக்கைகள் வெறும் “மாயை” (Delusional) என ஈரானின் உயர்மட்ட கூட்டு ராணுவ கட்டளைப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் இது குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,”அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அச்சுறுத்தல்கள், பிராந்தியத்தில் அமெரிக்கா சந்தித்துள்ள ‘அவமானம் மற்றும் இழிவை’ ஈடுசெய்யப் போவதில்லை.” என தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை இலக்கு வைக்கப் போவதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்திருந்த நிலையிலேயே, ஈரான் தரப்பிலிருந்து இந்தத் தீர்மானமிக்க பதில் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *