முச்சந்தி

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ; கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்ற தமிழ் மாணவி

வெளியாகியுள்ள 2025 (2026) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மன்னார் முருங்கன் மத்திய கல்லூரி மாணவி திரெஸ்டன் அருங்குமார் ஜதுர்சிகா கலைப்பிரிவில் சிறப்பான சாதனையைப் பதிவுசெய்துள்ளார்.

அவர் கலைத்துறையில் 3 ‘A’ பெறுபேறுகளைப் பெற்று, மன்னார் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையைப் பிடித்துள்ளார்.

அவரது இந்த சாதனை, பாடசாலைக்கும் மன்னார் மாவட்டத்திற்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் முயற்சி, ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் பெற்றோரின் ஆதரவு ஆகியவை இச்சிறப்பான வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஜதுர்சிகாவின் இந்த சாதனைக்கு கல்வி வட்டாரங்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *