முச்சந்தி
யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா ஓய்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகத் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் பதவி வகித்து வந்த மூத்த பேராசிரியர். சி.சிறிசற்குணராஜா நேற்று செவ்வாய்க்கிழமையுடன் (24) பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
பேராசிரியர். சிறிசற்குணராஜாவின் முதலாவது பதவிக் காலம் 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்- 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அவரது இரண்டாவது பதவிக் காலமும் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
![]()