உலகம்

விபத்தில் சிக்கிய இராணுவ விமானம் ; 100 பேரின் நிலை தொடர்பில் அச்சம்

கொலம்பியா வான்படைக்கு சொந்தமான Lockheed C-130 Hercules போக்குவரத்து விமானம், புவேர்ட்டோ லெகுயிசாமோ பகுதியில் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத்தில் இரண்டு முழு இராணுவ படைத்தளங்கள் உட்பட சுமார் 100 இராணுவத்தினர் பயணம் செய்ததாக ஆரம்ப தகவல்கள் குறிப்பிடுகின்றன.

விமானம் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கிராமப்புறப் பகுதியில் வீழ்ந்துள்ளதாகவும், தற்போது மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், உயிரிழப்புகள் குறித்த முழுமையான விபரங்களும், பயணிகள் பட்டியலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *