உலகம்

பிரான்ஸ் மாநகராட்சி தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள்-உலக அரசியலில் ஓங்கும் தமிழர்களின் கை!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் மாநகராட்சி தேர்தல் எதிர்வரும் மார்ச் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பிரான்ஸ் முழுவதும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்

அதில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர்களும் பலர் பங்கேற்கவுள்ளனர்.

பிரான்ஸில் வாழும் இலங்கை மற்றும் இந்தியத் தமிழர் சமூகங்கள் கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் அரசியலில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் சமூகத்தின் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில், நகராட்சி மட்டத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் பெறும் முயற்சிகளும் வலுப்பெற்றுள்ளன.

2026 தேர்தலில் பல நகராட்சிகளில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பிரான்ஸ் அரசியல் தளத்தில் தமிழ் சமூகத்தின் ஈடுபாடு அதிகரித்திருப்பது சமூக முன்னேற்றத்திற்கும், உள்ளூர் நிர்வாகத்தில் பல்வகைமை பிரதிநிதித்துவத்திற்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *