இலங்கை
உரிமை கிடைக்கும் வரை நாளெல்லாம் கரிநாள்தான்; மட்டு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள்

தமிழர்களது நிலத்தில் உரிமையுடன் வாழ்வதற்கான உரிமை எப்போது கிடைக்குமோ அப்போதுதான் எமக்கு சுதந்திர நாள். அதுவரைக்கும்இது தமிழர்களுக்கு கரிநாளாகத்தான் பிரகடனம் செய்து நாங்கள் செயல்படுவோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற கரிநாள் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஒருபோராட்டாம் சுதந்திரமாக நடாத்தமுடியாத எங்களுக்கு இந்த நாட்டில் ஒவ்வொரு தேசிய சுதந்திர தினமும் கரிநாள்தான் எனத் தெரிவித்தார்.
![]()
