உலகம்

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி பலி

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் உயிரிழந்துள்ளார்.

இதனை ஹிஸ்பொல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்பொல்லா கோட்டையான தஹியேயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில், ஆயுதப் பிரிவின் தலைமைத் தளபதி தபதாபாயும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஹரேத் ஹ்ரீக் பகுதியில் நடந்த தாக்குதலில்” “மாபெரும் தளபதி” தபதாபாய் கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்றில் ஹிஸ்பொல்லா தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இரு தரப்பினருக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த சண்டையில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட மிக மூத்த ஹிஸ்பொல்லா தளபதி தபதாபாய் ஆவார்.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு போருக்குப் பிறகு அவரைக் கொல்ல இராணுவம் மேற்கொண்ட மூன்றாவது முயற்சி இதுவென்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதல் “சிவப்பு எச்சரிக்கை கோட்டை” தாண்டிவிட்டதாகவும், பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் ஹிஸ்பொல்லாவின் மூத்த அதிகாரி மஹ்மூத் குமதி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *