பலதும் பத்தும்

கருணைக் கொலையை சட்டபூர்வமாக்கிய உருகுவே

மருத்துவ உதவியுடன் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதிக்கும் கருணைக்கொலை சட்டத்தை இயற்றிய முதல் லத்தீன் அமெரிக்க நாடாக உருகுவே (Uruguay) மாறியுள்ளது.

உருகுவே செனட்டில் முன்வைக்கப்பட்ட இந்த மசோதாவை பல மணிநேர விவாதத்திற்குப் பிறகு 31 சட்டமன்ற உறுப்பினர்களில் 20 பேர் அங்கீகரித்து நிறைவேற்றியுள்ளனர்.

லத்தீன் அமெரிக்காவின் பிற இடங்களில், கொலம்பியா (Colombia) மற்றும் ஈக்வடாரில் (Ecuador) உள்ள நீதிமன்றங்கள் இந்த நடைமுறையை சட்டப்பூர்வமாக்க சட்டங்களை இயற்றாமல் கருணைக்கொலையை குற்றமற்றதாக்கியுள்ளன.

சமீபத்திய கருத்துக் கணிப்பில், உருகுவேயர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் சட்டப்பூர்வ கருணைக்கொலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதா, வயது வந்த குடிமக்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் குணப்படுத்த முடியாத நோயின் இறுதி கட்டத்தில் உள்ளவர்களுக்கு அனுமதிக்கிறது.

கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு நெதர்லாந்து (Netherland) ஆகும், இந்தச் சட்டம் ஏப்ரல் 2002ல் நடைமுறைக்கு வந்தது.

நெதர்லாந்து பாராளுமன்றத்தின் கீழ் சபை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் “கருணைக் கொலை” மசோதா அங்கீகரிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button