பலதும் பத்தும்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும்?

2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசுத் தொகை எவ்வளவு கிடைக்கும் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

சர்வாதிகாரத்தை எதிர்த்து

இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு கிடைக்கும் என உலக நாடுகள் பல கூறி வருவதாக ஜனாதிபதி ட்ரம்ப் ஊடகங்களில் பல முறை கூறி வந்தாலும், வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் Maria Corina Machado என்பவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவில் ஜனநாயகத்தை ஊக்குவிப்பதிலும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அவர் ஆற்றிய பணிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான தரவுகளின் அடிப்படையில், அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவருக்கு 11 மில்லியன் ஸ்வீடன் kronor பரிசுத் தொகையாக கிடைக்கும் என்றே தெரிய வந்துள்ளது.
ஸ்வீடனில் வேதியியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க 1901ல் நோபல் பரிசு வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், மற்றும் பொருளாதார அறிவியல் என மொத்தம் ஆறு பிரிவுகளில் பரிசு வழங்கப்படுகிறது.

18 காரட் தங்கம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும்? | Prize Money Nobel Peace Laureateஇதில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சிறப்பு நோர்வே குழுவினரால் அறிவிக்கப்படுகிறது. நோபல் பரிசுடன், பரிசு பெற்றவர்களுக்கு ஒரு பதக்கம் மற்றும் பட்டமும் வழங்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசுப் பதக்கம் நோர்வே சிற்பி குஸ்டாவ் விஜெலேண்ட் மற்றும் ஸ்வீடிஷ் சிற்பி எரிக் லிண்ட்பெர்க் ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.

இந்தப் பதக்கம் 23 காரட் தங்கத்தால் ஆனது மற்றும் 192 கிராம் எடை கொண்டது. ஆனால் 1980 முதல், 18 காரட் தங்கமாக மாற்றப்பட்டது மற்றும் எடை சற்று அதிகரித்து 196 கிராமாகவும் அதிகரித்தது, ஆனால் அதன் 6.6 செ.மீ விட்டம் மாறாமல் உள்ளது.

பதக்கத்தின் முன்புறத்தில் ஆல்ஃபிரட் நோபலின் உருவப்படம் செதுக்கப்பட்டுள்ளது, அவரது பெயர் மற்றும் வாழ்ந்த ஆண்டுகள் பதக்கத்தின் விளிம்பில் பொறிக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button