பலதும் பத்தும்

மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை அணி சாதனை

(கொட்­ட­கலை நிருபர் )

மலேசிய அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிலம்பப் போட்டி 2025 (VEERAM INTERNATIONAL SILAMBAM CHAMPIONSHIP 2025) செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை சிலம்ப அணி பங்குபற்றிச் சிறப்பான சாதனையைப் பதிவு செய்தது.

வயது பிரிவு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த (கொட்டகலை, வட்டவளை, பத்தனை, திருகோணமலை, யாழ்ப்பாணம்,) ஐந்து வீரர்களுக்கான விமான டிக்கெட்டுகளை இலங்கை சிலம்பச் சம்மேலனத்திற்கு மலேசிய அரசு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இலங்கை அணி மொத்தம் 11 (தங்கம் – 1, வெள்ளி – 4, வெண்கலம் – 6 ) பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

பல நாட்டிலுள்ள சிலம்ப அமைப்புகளுடன் இணைந்து சிறப்பாகச் செயற்பட்டு வந்ததற்காகவே இலங்கை சிலம்பச் சம்மேலனத்திற்கு மலேசிய அரசு சிறப்பு அங்கீகாரமாக இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அணியின் வீரர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய நிலையில், பயிற்றுவிப்பாளராக ஆசான் ரா. திவாகரனும், முகாமையாளராக ன். ஜெகதீஸ் அணியை வழிநடத்தினர்.

இவ்வாய்ப்பை முன்னிட்டு, இலங்கையிலும் சிலம்பக் கலைக்கு உரிய முக்கியத்துவத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என இலங்கை சிலம்பச் சம்மேலனம் வலியுறுத்தியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button