இலங்கை

‘அனுர கோ ஹோம்’ ரணில் COME BACK; போராட்டக்காரர்கள் கோஷம்

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகவும் அவரை விடுவிக்கக் கோரியும்,நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள கியூ வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அனுர கோ ஹோம்’ தொடங்கிவிட்டது என்று கோஷமெழுப்பினர்.

அத்துடன் போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் “AKD GO கம” என்ற பதாதைகளை தாங்கியவண்ணம் கோஷங்களை எழுப்பியதுடன்,ரணில் விடுதலையாகி திரும்பி வரவேண்டுமெனக் கோரி “COMEBACK RANIL” என்ற வாசகங்களுடனும் பதாதைகளை தாங்கியவண்ணம் கோஷங்களையும் எழுப்பினர்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன, அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டம் இப்போது தொடங்கிவிட்டது என்று கூறினார்.

இந்த அடக்குமுறை ஊர்வலத்திற்கு அதிக ஆயுள் இல்லை என்றும் கவிந்த ஜெயவர்தன கூறினார்.

இதேவேளை, நீதிமன்றத்துக்கு வருகைதந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆசு மாரசிங்க ஆகியோரை பொலிஸார் நீதிமன்றத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற வழக்கு விசாரணை அறையில் பிரசன்னமாய் இருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *