பலதும் பத்தும்

குழந்தைகளுடன் 4 ஆண்டுகளாக தப்பியோடுபவரை திரும்பக் கோரிக்கை

நியூசிலாந்தில் நான்காண்டுகளுக்கு முன்னர் தனது மூன்று பிள்ளைகளுடன் காணாமல் போன தந்தையின் குடும்பமானது அவரை வீட்டுக்கு வருமாறு கோரியுள்ளது.

பிள்ளைகளின் காப்புச் சண்டையொன்றில் 9, 10, 12 வயதான மூன்று பிள்ளைகளுடன் அவர்களின் குடும்ப வீட்டிலிருந்து 2021ஆம் ஆண்டு குறித்த நபர் காணாமல் போனதிலிருந்து தேசிய ரீதியிலான தேடுதல் இடம்பெற்று வருகிறது.

காணாமல் போன பின்னர் முதற்தடவையாக கடந்தாண்டு ஒக்டோபரில் இவர்கள் தென்பட்டிருந்தனர். பற்றையொன்றினூடாக ஏறிக் கொண்டிருந்தனர்.

நியூசிலாந்தின் வட தீவின் மேற்கு வைகடோ பிராந்தியத்தில் குறித்த நபர் மறைந்து முகாமிட்டுள்ளதாக பொலிஸார் நம்புகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button